
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 8 புல்-அப்ஸ்களை செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
தனது தொண்டு நிறுவனத்துக்காக நிதி திரட்டுவதற்காக அவர் மேற்கொண்ட இந்த முயற்சி முந்தைய சாதனைகளை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் ஜாக்சன் இட்டாலியானோ. உடற்பயிற்சி ஆர்வலரான இவர் தொண்டு நிறுவனத்துக்காக நிதி திரட்டுவதற்காக புதிய முயற்சியை மேற்கொள்ளத் திட்டமிட்டார்.
அதாவது 24 மணிநேரத்தில் 8,008 புல்-அப்ஸ் எடுத்து நிதி திரட்ட முடிவு செய்தார். அதன்படி 24 மணி நேரத்தில் திட்டமிட்டபடி புல்-அப்ஸ்களை எடுத்து முடித்தார். இதன்மூலம் அமெரிக்க ரூபாய் மதிப்பில் 6 ஆயிரம் (இந்திய ரூபாய் மதிப்பில் 4,80,000) நிதி திரண்டது.
மேலும், இதற்கு முந்தையை உலக சாதனையையும் அவர் முறியடித்தார். 24 மணி நேரத்தில் 7,715 புல்-அப்ஸ் எடுத்ததே இதற்கு முந்தைய உலக சாதனையாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







