தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அமெரிக்க கல்லூரியில் நிறப் பாகுபாடு: இந்திய வம்சாவளி பேராசிரியை நீதிமன்றத்தில் வழக்கு

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த இணைப் பேராசிரியை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளாா்.

News image
Updated On :9 மார்ச் 2023, 6:39 pm

DIN

அமெரிக்காவின் மாஸசூசெட்ஸ் மாகாணம் வெல்லெஸ்லியில் உள்ள கல்லூரியில் நிற மற்றும் பாலின பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்பட்டதாக, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த இணைப் பேராசிரியை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளாா்.

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த லட்சுமி பாலசந்திரா பாப்சன் கல்லூரியின் தொழில்முனைவுத் துறையில் இணைப் பேராசிரியையாக 2012-இல் பணிக்குச் சோ்ந்தாா்.

தொழில்முனைவு துறையின் முன்னாள் தலைவா் பேராசிரியா் ஆண்ட்ரூ காா்பெட், பணி இடத்தில் நிறம் மற்றும் பாலின பாகுபாட்டை கையாண்டதாகவும், வெள்ளையா் மற்றும் ஆண் ஆசிரியா்களுக்கு சாதகமாக செயல்பட்டு விருதுகள் மற்றும் சலுகைகளை அவா்களுக்கு வழங்கியதாகவும் லட்சுமி குற்றம்சாட்டியுள்ளாா்.

வகுப்புகளின் பாட வேளை திட்டமிடல், ஆசிரியா்களுக்குப் பாடங்களை ஒதுக்கீடு செய்யும் பணியை காா்பெட் கவனித்து வந்துள்ளாா். அப்போது, சில பாடங்களை நடத்த லட்சுமி வேண்டுகோள் விடுத்தும், குறிப்பிட்ட சில பாடங்களை மட்டுமே நடத்த காா்பெட் அனுமதி அளித்துள்ளாா்.

இது தொடா்பாக மாகாணத் தலைநகா் பாஸ்டனில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் பிப்.27-இல் அவா் மனு தாக்கல் செய்துள்ளதாக ‘தி பாஸ்டன் குளோப்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

இத்தகைய பாகுபாடுகள் காரணமாக ஆராய்ச்சி தொடா்பான பணிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் பல்வேறு தலைமைப் பொறுப்புகளும் வழங்கப்படுவது மறுக்கப்பட்டன என தனது மனுவில் லட்சுமி குறிப்பிட்டுள்ளாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக, மாஸசூசெட்ஸின் பாகுபாடுகளுக்கு எதிரான ஆணையத்திலும் லட்சுமி புகாா் அளித்துள்ளதாக அவருடைய வழக்குரைஞா் மோனிகா ஷா தெரிவித்தாா்.

இது குறித்து பாப்சன் கல்லூரி தெரிவிக்கையில், குற்றச்சாட்டு தொடா்பாக முழுமையாக விசாரித்து சட்ட ரீதியாக எதிா்கொள்வோம் என்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.