எட்டாவது முறையாக தந்தையாகிறார் போரிஸ் ஜான்ஸன்

பிரிட்டன் முன்னாள் பிரதமா் போரிஸ் ஜான்ஸனின் மனைவி கேர்ரி ஜான்ஸன் கருவுற்றிருக்கிறார்.
எட்டாவது முறையாக தந்தையாகிறார் போரிஸ் ஜான்ஸன்
Published on
Updated on
1 min read

பிரிட்டன் முன்னாள் பிரதமா் போரிஸ் ஜான்ஸனின் மனைவி கேர்ரி ஜான்ஸன் கருவுற்றிருப்பதாகவும், இன்னும் ஓரிரு வாரத்தில் தங்கள் குடும்பத்தில் புதிய உறுப்பினர் சேர்ந்துவிடுவார் என்றும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

தனது இரண்டு பிள்ளைகளையும் கையில் பிடித்தபடி, அவர் ஒரு புகைப்படத்துடன், இன்ஸ்டாவில் அந்த பதிவை போட்டுள்ளார். அதில், எங்கள் குடும்பத்தில் இன்னும் ஓரிரு வாரத்தில் புதிய உறுப்பினர் இணைந்துவிடுவார். கடந்த எட்டு மாதங்களாக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம், அந்த குட்டிக் குழந்தைப் பார்க்க இனியும் காத்திருக்க முடியவில்லை. மீண்டும் அண்ணன் ஆகப்போவதில் வில்ஃப் குஷியாக உள்ளார். ரோமியும் அடுத்து என்ன குழந்தை பிறக்கப் போகிறது என்பதில் ஆர்வமாக உள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

போரிஸ் ஜான்ஸன் - கெர்ரி திருமணம் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  

தற்போது பிறக்கப்போகும் குழந்தை போரிஸ் ஜான்ஸனின் எட்டாவது குழந்தை. அவருக்கும் முன்னாள் மனைவி மரினா வீலருக்கும் நான்கு குழந்தைகள் உள்ளனர். பிறகு காதலி ஹெலனுக்கு ஒரு குழந்தை உள்ளதாக பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன.

முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், தற்போது போரிஸ் ஜான்ஸன் - கெர்ரி தம்பதிகளுக்கு பிறக்கப் போகும் குழந்தை, போரிஸ் ஜான்ஸனின் எட்டாவது குழந்தையாகும்.

அண்மையில்தான் போரிஸ் ஜான்ஸன், 9 படுக்கையறைகள் கொண்ட கடற்கரையோர பங்களாவை வாங்கியதாக கார்டியன் செய்தி வெளியிட்ட நிலையில், எட்டாவது குழந்தை பிறக்கப்போவதாக இன்ஸ்டா பதிவு கூறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com