ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

இஸ்ரேல் பிணைக் கைதிகளின் உறவினர்களை சந்தித்த போப் பிரான்சிஸ்

காஸாவில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலியர்கள் மற்றும் இஸ்ரேலில் இருக்கும் பாலஸ்தீன கைதிகளின் உறவினர்களை போப் பிரான்சிஸ் இன்று தனித்தனியே சந்தித்துப் பேசினார்.

News image
Updated On :22 நவம்பர் 2023, 10:41 am

வாடிகன்: காஸாவில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலியர்கள் மற்றும் இஸ்ரேலில் இருக்கும் பாலஸ்தீன கைதிகளின் உறவினர்களை போப் பிரான்சிஸ் இன்று தனித்தனியே சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது போப் பிரான்சிஸ் பேசுகையில், அமைதி நிலவ வேண்டும் என்று வேண்டிக்கொள்வதாகவும், அனைவரையும் கொல்ல வேண்டும் என்ற பயங்கரவாத எண்ணத்தை விட்டொழிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

காஸா மீதான தாக்குதலை 4 நாள்கள் நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு புதன்கிழமை அறிவித்திருக்கும் நிலையில், இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டிருந்த நிலையில், இருதரப்பு உறவினர்கள் மத்தியிலும் போப் பிரான்சிஸ் பேசினார். அப்போது, இந்த போர் நிறுத்தம் குறித்து போப் பிரான்சிஸ் எதையும் குறிப்பிட்டுப் பேசவில்லை.

காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி கடந்த மாதம் 7-ஆம் தேதி தாக்குதல் நடத்தி ஹமாஸ் அமைப்பினா், அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுருவி சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். இதில் மிகப் பெரும்பான்மையானவா்கள் பொதுமக்கள்.

Story image

அத்துடன், 200-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், முதியவா்கள், ராணுவத்தினரை ஹமாஸ் அமைப்பினா் காஸாவுக்குள் கடத்திச் சென்றனா்.

இந்த கொடூரத் தாக்குதலைத் தொடா்ந்து, ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட இஸ்ரேல் அரசு சூளுரைத்தது. அதற்காக காஸா பகுதியை ஒரு மாதத்துக்கும் மேல் முற்றுகையிட்டு மிகக் கடுமையாக குண்டு வீச்சு நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், தரைவழியாகவும் காஸாவுக்குள் நுழைந்து தாக்குல் நடத்தி வருகிறது.

காஸாவில் பிணைக் கைதிகளாக இருக்கும் 200 பேரில் சிலரின் உறவினர்களை சந்தித்ததாகவும், இஸ்ரேல் சிறையில் இருக்கும் பாலஸ்தீனர்களின் உறவினர்களையும் பாலஸ்தீன தூதருடன் சந்தித்ததாகவும் போப் குறிப்பிட்டார்.

பீட்டர்ஸ் சதுக்கத்தில் பாலஸ்தீன தேசிய கொடிகளை ஏந்தியும், மனிதப் படுகொலையை எடுத்துரைக்கும் காஸா போர்க் காட்சிகள் கொண்ட பதாகைகளையும் பலரும் ஏந்தியிருந்தனர்.

போரை தாண்டி நாம் சென்றுவிட்டோம். இனி எப்போதும் இது போராக இருக்க முடியாது. இது பயங்கரவாதம் என்று போப் பிரான்சிஸ் குறிப்பிட்டார். அமைதியை நோக்கிச் செல்ல எங்களுக்கு உதவுங்கள், அமைதிக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.