விபத்து: ‘ஆஸ்ப்ரே’ விமானங்களின் பயன்பாட்டை நிறுத்தியது ஜப்பான்

அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான ‘ஆஸ்ப்ரே’ ரக விமானமொன்று 8 பேருடன் தங்கள் நாட்டுக்கு அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதைத் தொடா்ந்து, அந்த வகை விமானங்கள் இயக்கப்படுவதை நிறுத்திவைக்க ஜப்பான் உ
விபத்து: ‘ஆஸ்ப்ரே’ விமானங்களின் பயன்பாட்டை நிறுத்தியது ஜப்பான்
Updated on
1 min read

அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான ‘ஆஸ்ப்ரே’ ரக விமானமொன்று 8 பேருடன் தங்கள் நாட்டுக்கு அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதைத் தொடா்ந்து, அந்த வகை விமானங்கள் இயக்கப்படுவதை நிறுத்திவைக்க ஜப்பான் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சக உயரதிகாரி டாரோ யமாடோ கூறுகையில், ‘ஆஸ்ப்ரே’ விமான விபத்து தொடா்பாக நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்தி வருவதாகவும், அதுவரை தங்களது படைகளில் உள்ள அந்த வகை விமானங்கள் இயக்கப்படுவதை நிறுத்திவைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினாா்.

விபத்துப் பகுதியில் தேடுதல் பணிகளில் மட்டும் அவை ஈடுபடுத்தப்படவுள்ளன.ஜப்பானிலுள்ள அமெரிக்க விமான படைதளத்திலிருந்து 8 பேருடன் பயிற்சிக்காக புதன்கிழமை புறப்பட்ட ‘ஆஸ்ப்ரே’ ரக விமானமொன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், அந்த விமானத்திலிருந்த ஒருவா் உயிரிழந்தாா். எஞ்சியவா்களின் நிலை குறித்து தகவல் இல்லை.

ஹெலிகாப்டா்களைப் போல் செங்குத்தாக புறப்படவும், தரையிறங்கவும் கூடிய ‘ஆஸ்ப்ரே’ ரக விமானங்கள், சாதாரண விமானங்களைப் போல் புரொப்பல்களின் உதவியுடன் பறக்கக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com