வரும் 2027ஆம் ஆண்டுக்குள், ஆட்டோமொபைல் துறையில் சீனத்தை பின்னுக்குத் தள்ளி, இந்தியா முதலிடம் பிடிக்க வேண்டும் என்பதே இலக்கு என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பராகுவேவில் நடைபெற்ற 27வது உலக சாலை மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இவ்வாறு கூறினார்.
இன்னும் 3 - 4 ஆண்டுகளில், உலகிலேயே மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம். புது தில்லியில் அமையவிருக்கும் ஊரக விரிவாக்கச் சாலைகள், சுற்றுச் சாலைகள் குறித்த தகவலையும் அவர் பகிர்ந்து கொண்டார். இந்த சாலைகள் இன்னும் 2-3 மாதங்களில் திறக்கப்படும் என்றும், இது அமைக்கப்பட்டால், தலைநகரில் அமைந்துள்ள விமான நிலையத்தை விரைவாக அடையலாம் என்றும் அறிவித்துள்ளார்.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும், இந்திய ஆட்டோமொபைல் துறை பல மடங்கு உயர்வை அடைந்திருப்பதாகக் குறிப்பிட்ட நிதின் கட்கரி, கடந்த ஆண்டு, ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்ததாகவும், தற்போது அமெரிக்கா மற்றும் சீனாவை முந்துவதே இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


