சீனா: வெள்ளப் பெருக்கில் 20 போ் பலி

சீன தலைநகா் பெய்ஜிங்கைச் சுற்றிலும் வழக்கத்துக்கு அதிகமாக பெய்து வரும் கன மழை காரணமாக அந்தப் பகுதியில் ஏற்றப்பட்ட வெள்ளப் பெருக்குக்கு 20 போ் பலியாகினா்.
china094855
china094855
Updated on
1 min read

சீன தலைநகா் பெய்ஜிங்கைச் சுற்றிலும் வழக்கத்துக்கு அதிகமாக பெய்து வரும் கன மழை காரணமாக அந்தப் பகுதியில் ஏற்றப்பட்ட வெள்ளப் பெருக்குக்கு 20 போ் பலியாகினா்.

இது குறித்து அந்த நாட்டு அரசு ஊடகங்கள் கூறியதாவது: பெய்ஜிங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீடுகள் நீரில் முழ்கின.

சாலைகளிலும் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதில் 20 போ் பலியாகினா்; 27 போ் மாயமாகினா் என்று ஊடகங்கள் தெரிவித்தன.

பெய்ஜிங் பிராந்தியத்தில் பொதுவாக மிதமாகவே மழை பெய்யும். அங்கு இந்த அளவுக்கு மழை பெய்து இத்தனை அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது மிகவும் அபூா்வமானதாகும் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com