நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

டென்மார்கில் பறவைக் காய்ச்சல்: 50 ஆயிரம் கோழிகளை அழிக்க முடிவு!

மேற்கு டென்மார்க்கில் உள்ள ஒரு பண்ணையில் பறைவைக் காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து 50 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட உள்ளதாக மீன்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

News image

பறவைக் காய்ச்சல்: மகாராஷ்டிரத்தில் 45 கோழிகள் பலி

Updated On :3 ஜனவரி 2023, 7:07 am

மேற்கு டென்மார்க்கில் உள்ள ஒரு பண்ணையில் பறைவைக் காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து 50 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட உள்ளதாக மீன்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தலைநகர் கோபன்ஹேஜனுக்கு மேற்கே 177 கி.மீ தொலைவில் உள்ள ஹெடஸ்டெட் நகராட்சியின் அருகிலுள்ள பண்ணையில் பறவை காய்ச்சலால் பல கோழிகள் இறந்ததைக் கண்டுபிடிக்கப்பட்டது. புத்தாண்டு தினத்தன்று கோழிகளுக்கு இந்த வைரஸ் காய்ச்சல் பரவியிருப்பது முதன்முதலில் கண்டறியப்பட்டது.

பண்ணையில் உள்ள கோழிகள் அதிகம் தொற்று ஏற்படுத்தக்கூடிய எச்5என்1 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக தொற்று மேலும் பரவாமல் தடுக்க 50 ஆயிரம் கோழிகளை அழிக்க உள்ளதாக டேனிஷ் கால்நடை மற்றும் உணவு நிர்வாகத்தின் லோட்டே பிரிங்க் கூறினார். 

பாதிக்கப்பட்ட அனைத்து கோழிகளும் அழிக்கப்பட்டு, அகற்றப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து முழு பண்ணையையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் என்று அவர் கூறினார். பண்ணையைச் சுற்றி 10 கி.மீட்டர் தொலைவுக்கு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

டென்மார்க்கில் அக்டோபர் 2022க்குப் பிறகு, நான்காவது முறையாக, மிகப்பெரிய அளவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இதுவாகும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.