
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்
உக்ரைனில் நுழைந்துள்ள ரஷியப் படைகள் கண்டிப்பாக போரில் வெல்லும் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் ஓராண்டை நெருங்கியுள்ளது. உக்ரைன் பகுதிகளைக் கைப்பற்ற ரஷியா தீவிரமாக போரிட்டு வரும் நிலையில் உக்ரைனும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் ரஷியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
சமீபமாக ரஷியா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் முக்கிய கட்டடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
கீவ் நகரின் முக்கிய கட்டடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ரஷியா, டினிப்ரோவில் உள்ள அடுக்குமாடி கட்டடங்களின் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ’உக்ரைனில் நுழைந்துள்ள ரஷியப்படைகள் போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...