கடினமான சூழலில் இலங்கைக்கு உதவிய இந்தியாவுக்கு நன்றி: மகிந்த ராஜபட்ச

இலங்கை நெருக்கடியான சூழலில் தவித்தபோது உதவிய இந்தியாவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனான சந்திப்புக்குப் பிறகு இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச நன்றி தெரிவித்தார். 
கடினமான சூழலில் இலங்கைக்கு உதவிய இந்தியாவுக்கு நன்றி: மகிந்த ராஜபட்ச

இலங்கை நெருக்கடியான சூழலில் தவித்தபோது உதவிய இந்தியாவுக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனான சந்திப்புக்குப் பிறகு இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச நன்றி தெரிவித்தார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருடன் இந்தியா-இலங்கை பரஸ்பர உறவுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட அவர் இதனை தெரிவித்தார். 

கடந்த ஆண்டின் தொடக்கம் முதலே இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவியது. இதனையடுத்து, மக்கள் அனைவரும் அப்போதைய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவின் அரசுக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டனர். தனது சகோதரர் தலைமையிலான அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் பெரிய அளவில் வெடித்ததால் கடந்த மே மாதம் மகிந்த ராஜபட்ச பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யம் நிலைக்குத் தள்ளப்பட்டார். 

இந்த நிலையில், இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்த இலங்கைக்கு உதவிய இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com