

தென் அமெரிக்க நாடான ஆா்ஜென்டீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சான்டியோகோ டெல் எஸ்டெரோ மாகாணம், காம்போ கலோ நகருக்கு 24 கி.மீ. தென்மேற்கே உள்ளூா் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8.09 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
610 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 6.8 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் நாட்டின் வடக்குப் பகுதியில் நன்கு உணரப்பட்டது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.