கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விமான விபத்தில் மாயமான 4 குழந்தைகள் 40 நாட்களுக்குப் பின் அமேசான் காடுகளில் உயிருடன் மீட்பு

கொலம்பியாவில் விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்து காணாமல் போன 4 குழந்தைகள் 40 நாட்களுக்குப் பிறகு அமேசான் காடுகளில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 

News image
Updated On :10 ஜூன் 2023, 12:57 pm

DIN

கொலம்பியாவில் விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்து காணாமல் போன 4 குழந்தைகள் 40 நாட்களுக்குப் பிறகு அமேசான் காடுகளில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 

கொலம்பியாவில் கடந்த மே 1ஆம் தேதி செஸ்னா 206 இலகுரக விமானம் ஒன்று அமேசானாஸ் மாகாணத்தில் உள்ள அரராகுவாரா மற்றும் சான் ஜோஸ் டெல் குவேரியார் ஆகிய நகரங்களுக்கு இடையே பறந்து கொண்டிருந்த போது திடீரென காணாமல் போனது. விபத்தைத் தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட வீரர்கள் மோப்ப நாய்களுடன் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இதையடுத்து கடந்த மாதம், விமானத்தின் பாகங்களோடு விமானி மற்றும் இரண்டு பெரியவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 

இருப்பினும் அதில் பயணித்த மற்ற 4 குழந்தைகளின் நிலை என்னவென்று தெரியவில்லை. இந்த நிலையில் தொடர் தேடுதல் நடவடிக்கையின் பயனாக 4 குழந்தைகளும் 40 நாட்களுக்குப் பிறகு அமேசான் காடுகளில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அந்நாட்டு அதிபர் பெட்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில், ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகிழ்ச்சி. கடந்த 40 நாட்களுக்கு முன் கொலம்பிய காடுகளில் காணாமல்போன குழந்தைகள் 4 பேரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை குழந்தைகளுடன் பேசுவேன் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மீட்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அடர் காடுகளில் இருந்து 40 நாட்களுக்குப் பிறகு 4 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. விபத்தில் இறந்த பெரியவர்களில் ஒருவரான ரனோக் முக்குடுய்-தான் நான்கு குழந்தைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.