சோமாலியா உணவகத்தில் பயங்கரவாத தாக்குதல்: 9 பேர் பலி!

சோமாலியா தலைநகர் மொகதிசுவில் கடற்கரை உணவகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று வீரர்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.
சோமாலியா உணவகத்தில் பயங்கரவாத தாக்குதல்: 9 பேர் பலி!

சோமாலியா தலைநகர் மொகதிசுவில் கடற்கரை உணவகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று வீரர்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.

வெள்ளியன்று இரவு தொடங்கிய இந்த தாக்குதல் சனிக்கிழமை அதிகாலை வரை நீடித்தது. சம்பவ இடத்தில் திரண்ட ராணுவம் மற்றும் போலீஸார் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என 84 பேர் உணவகத்திலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர். 

அல்-கெய்தாவின் கிழக்கு ஆப்பிரிக்காவின் இணை நிறுவனமாக அல்-ஷபாப் இந்த தாக்குதலுக்கு பொற்றுபேற்றுள்ளது. 

இந்த உணவகத்தில் வெளிநாட்டுப் பயணிகள், அரசியல் தலைவர்கள் தங்குவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சம்பவ இடத்தில் ராணுவம் மற்றும் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com