ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

உலகின் தலைசிறந்த விமானநிலையங்களின் பட்டியலில் முன்னணியில் சிங்கப்பூர்

உலகின் தலைசிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூர் நாட்டின் ஷாங்கி விமானநிலையம் முதலிடம் பெற்றுள்ளது. 

News image
Updated On :16 மார்ச் 2023, 5:35 pm IST

உலகின் தலைசிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூர் நாட்டின் ஷாங்கி விமானநிலையம் முதலிடம் பெற்றுள்ளது. 

கரோனா தொற்றுக்குப் பிறகு விமான பயணங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பல்வேறு விமான நிறுவனங்களும் பயணிகளை ஈர்க்க புதிய புதிய சலுகைகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றன. 

இந்நிலையில் உலகின் தலைசிறந்த விமான நிலையங்களின் பட்டியலை ஸ்கைடிராக்ஸ் எனும் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டின் தலைசிறந்த விமானநிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூரின் ஷாங்கி விமானநிலையம் முதலிடம் பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து தோஹா விமானநிலையமும், டோக்கியோவின் ஹனீடா விமான நிலையமும், சியோலின் இங்கியோன் விமான நிலையமும், பாரீஸின் சார்லஸ் டி கெல்லி விமானநிலையமும் இடம் பெற்றுள்ளன. 

இவைகளைத் தொடர்ந்து இஸ்தான்புல், முனிச்,  சூரிச், நரிட்டா உள்ளிட்ட விமான நிலையங்கள் சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் தில்லியில் உள்ள இந்திராகாந்தி விமான நிலையம் 36ஆவது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.