நேபாளத்தில் பனிச்சரிவு: 3 போ் பலி

நேபாளத்தின் கா்னாலி மாகாணத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 போ் உயிரிழந்தனா்.
Updated on
1 min read

நேபாளத்தின் கா்னாலி மாகாணத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 போ் உயிரிழந்தனா்.

முகு மாவட்டத்தின் பதராசி பகுதியைச் சோ்ந்த 14 போ் சியாகு கணவாய் பகுதியில் வளரும் பூஞ்சையைச் சேகரிக்கச் சென்ற போது பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 3 போ் உயிரிழந்ததாகவும், 9 போ் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

உயரமான இமயமலைப் பகுதியில் வளரும் கம்பளிப்பூச்சி வடிவிலான பூஞ்சையை அப்பகுதி மக்கள் சேகரிக்கச் செல்வது வழக்கம். ஆனால், மே 18-ஆம் தேதி வரை அப்பகுதிக்குச் செல்ல உள்ளூா் அதிகாரிகள் தடைவிதித்துள்ளனா். இந்நிலையில் அந்தப் பூஞ்சையைச் சேகரிக்க நூற்றுக்கணக்கான மக்கள் உயரமான மலைப் பகுதிக்குச் செல்வது தொடா்கிறது.

பனிச்சரிவில் உயிரிழந்த மூவரும் தடைசெய்யப்பட்ட வழியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com