தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

காஸாவிலிருந்து 7,000 பேரை வெளியேற்ற உதவுவதாக எகிப்து அறிவிப்பு

காஸாவில் இருந்து சுமார் 7,000 வெளிநாட்டினரை வெளியேற்ற உதவுவதாக எகிப்து தெரிவித்துள்ளது. 

News image

காஸாவில் இருந்து 2-ஆவது நாளாக வெளியேறும் வெளிநாட்டினர் மற்றும் காயமடைந்த பாலஸ்தீனியர்கள்.

Updated On :2 நவம்பர் 2023, 11:13 am

காஸாவில் இருந்து சுமார் 7,000 வெளிநாட்டினரை வெளியேற்ற உதவுவதாக எகிப்து தெரிவித்துள்ளது. 

காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையேயான போர் இன்று 27 ஆவது நாளாக நீடித்து வருகிறது. வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் ராணுவம் காஸாவிற்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. 

ரஃபா எல்லையில் குவிந்துள்ள வெளிநாட்டினர்

ரஃபா எல்லையில் குவிந்துள்ள வெளிநாட்டினர்

இதனால் காஸா உருக்குலைந்துள்ளது. ஏற்கெனவே அங்கு தண்ணீர், உணவு, மருந்து, எரிபொருள் என அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, இணையமும் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. 

Story image

இந்நிலையில் காஸாவில் இருந்து வெளிநாட்டினரை வெளியேற்ற இஸ்ரேல் அனுமதித்து நேற்று முதற்கட்டமாக வெளிநாட்டு பாஸ்போா்ட் வைத்துள்ள 320 போ் ரஃபா எல்லை வழியாக எகிப்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதில் பாலஸ்தீனியர்கள் உள்பட காயமடைந்த 76 பேர் எகிப்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Story image

இதைத் தொடர்ந்து இன்று மேலும் 500 பேர் வரையில் எகிப்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெரும்பாலானோர் அமெரிக்கர்கள் என்பது தகவல். காயமடைந்த பாலஸ்தீனியர்கள் சுமார் 100 பேரும் வெளியேறுகிறார்கள். இந்த வெளியேற்றம் இன்னும் சில நாள்களுக்குத் தொடரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ்

காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ்

இதையடுத்து காஸாவில் உள்ள வெளிநாட்டினர் 7,000 பேரை வெளியேற்ற உதவுதாக எகிப்து தெரிவித்துள்ளது. 

Story image

இந்த போரில் இதுவரை 8,800 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் தரப்பில் உயிரிழப்பு 1,400 என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.