காஸாவில் பலி 9,061 ஆக உயர்வு! இதில் 3,760 குழந்தைகள், 2,326 பேர் பெண்கள்!!

இஸ்ரேல் தாக்குதலில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 9,061 ஆக அதிகரித்துள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 
காஸாவில் பலி 9,061 ஆக உயர்வு! இதில் 3,760 குழந்தைகள், 2,326 பேர் பெண்கள்!!

இஸ்ரேல் தாக்குதலில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 9,061 ஆக அதிகரித்துள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 

காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் கடந்த அக். 7 ஆம் தேதி தொடங்கிய போர் இன்று 27 ஆவது நாளாக நீடித்து வருகிறது. வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் ராணுவம் காஸாவிற்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. 

இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேலில் தாக்குதலை மேற்கொண்ட ஹமாஸ் படையினருக்கு பதிலடியாக காஸா முற்றிலும் அளிப்பதே நோக்கம் என்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்நிலையில், இந்த போரில் காஸாவில் உயிரிழப்பு 9,061 ஆக அதிகரித்துள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதில் 3,760 பேர் குழந்தைகள், 2,326 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மட்டும் 195 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 120 பேரைக் காணவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜபாலியா அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட தாக்குதல் 'போர்க்குற்றம்' என்று ஐ.நா. கூறியுள்ளது. 

இஸ்ரேல் தரப்பில் 1,400 உயிரிழப்புகள் என்றும் அதில் 332 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com