திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

'போருக்குப் பிறகு காஸாவின் பாதுகாப்பு இஸ்ரேலிடம் இருக்கும்' - பிரதமர் நெதன்யாகு

போருக்குப் பிறகு காஸாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 

News image

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

Updated On :7 நவம்பர் 2023, 7:03 am

DIN

போருக்குப் பிறகு காஸாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 

காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் கடந்த அக். 7 ஆம் தேதி தொடங்கிய போர் இன்று 32 ஆவது நாளாக நீடித்து வருகிறது. வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் ராணுவம் காஸாவிற்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. 

போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தாலும், ஹமாஸ் படையினரை முற்றிலும் அழிப்பதே நோக்கம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறி வருகிறார். 

இந்நிலையில் ஏபிசி செய்தி ஊடகத்திற்கு திங்கள்கிழமை பிற்பகல் அளித்த பேட்டியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸுடனான போருக்குப் பிறகு காஸாவில் ஒட்டுமொத்த பாதுகாப்பு பொறுப்பு இஸ்ரேலிடம் இருக்கும், இது காலவரையற்ற காலமாக இருக்கும் என்று கூறினார். 

மேலும், பிணைக் கைதிகளை விடுவிக்காமல் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை என்று கூறிய அவர், குறுகிய கால இடைவெளியில் போர் நிறுத்தங்கள் செய்ய தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். 

அவர் பேசியதன் அடிப்படையில், சுமார் 23 லட்சம் பாலஸ்தீனிய மக்கள் வசிக்கும் காஸா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே இஸ்ரேல் விரும்புகிறது என்று கூறப்பட்டுள்ளது. 

முன்னதாக, போர் நிறுத்தம் தொடர்பாக நேற்று இஸ்ரேல் பிரதமருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த போரில் பாலஸ்தீனியர்கள் தரப்பில் உயிரிழப்பு 10,000-யைக் கடந்துள்ளது. இதில் 4,100 பேர் குழந்தைகள், 2,640 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் தரப்பில் 1,400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.