இலங்கையில் இன்று(செவ்வாய்க்கிழமை) பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 1,326 கிலோமீட்டர் தொலைவில் இன்று பிற்பகல் 12.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய பெருங்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 எனப் பதிவாகியுள்ளது.
இதனால் தலைநகர் கொழும்புவில் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் ஏதும் இல்லை.