கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

காஸா தெற்கு எல்லையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது இஸ்ரேல்!

காஸா எல்லையைச் சுற்றி தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

News image
Updated On :9 அக்டோபர் 2023, 12:19 pm

DIN

காஸா எல்லையைச் சுற்றி தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காஸா எல்லைப் பகுதியில் ஒருசில ஹமாஸ் படையைச் சேர்ந்தவர்களின் நமாட்டம் மட்டுமெ இருப்பதாகவும், அதனைக் கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட எல்லைப் பகுதி காஸா. இந்தப் பகுதியில் ஹமாஸ் என்ற படை தன்னாட்சி செய்து வருகிறது. இதற்கு பாலஸ்தீனம் ஆதரவு தெரிவித்துள்ளது. காஸா எல்லையைக் கைப்பற்ற இஸ்ரேல் பலமுறை தாக்குதல்களை நடத்தியுள்ளது. 

இந்நிலையில், இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை (அக். 7) ஹமாஸ் படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் மூன்றரை மணிநேரம் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பொதுமக்களும், ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். போர் அறிவிப்பை வெளியிட்டும் இஸ்ரேல் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. 

இந்நிலையில், காஸா தெற்கு எல்லையைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, தாக்குதல் நடத்தப்பட்ட எல்லைப் பகுதிகளைக் கட்டுக்குள் கொண்டுவந்திருந்தாலும், ஹமாஸ் படையைச் சேர்ந்தவர்களில் சிலர் காஸா எல்லையில் எஞ்சியுள்ளனர். இஸ்ரேல் - ஹமாஸ் படையினரிடையே தாக்குதல்கள் நடந்துவருகிறது. தாக்குதல் நடத்திக்கொண்டு இஸ்ரேல் படை முன்னேறுகிறது. இஸ்ரேலில் தற்போது வரை 73 ராணுவ வீரர்கள் உள்பட 700 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் இரு நாடுகளிலும் சுமார் 1,100 பேர் இறந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.