காசாவில் இன்னும் சில மணி நேரங்களில் மின்சாரம் இருக்காது!

காசாவில் இன்னும் சில மணி நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதாக மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

காசா நகரம் முழுவதும் சில மணி நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதாக மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.

இஸ்ரோ - காசா போர் காரணமாக மின்சாரம், உணவு, நீர், எரிவாயு எதுவும் அனுமதிக்க போவதில்லை என்று இஸ்ரேல் கூறியது.

இஸ்ரேல் மின் விநியோகத்தை நிறுத்திய பிறகு, அதன் ஒரே மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள  எரிபொருளும் சில மணிநேரங்களில்  தீர்ந்துவிடும் என்று காசாவின் மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.

மின்சார உற்பத்தி நிலையத்திற்கு எரிபொருளை கொண்டுவதற்கான எந்த வழியும் இல்லாததால்,  இன்னும் சில மணி நேரங்களில் காசா நகர் முழுவதும்  மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று(புதன்கிழமை) பிற்பகலுக்கு மேல் மின்சார உற்பத்தி நிலையம் மூடப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com