இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது பாலஸ்தீன அரசு.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் காரணமாக பாலஸ்தீனத்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியிருக்கும் நிலையில், அந்நாட்டு அரசு, போரை நிறுத்த அழைப்பு விடுத்துள்ளது.
தீவிர போர் நடந்து வரும் காசா நகரில் அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், பாலஸ்தீன மக்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், சர்வதேச நாடுகள் தலையிட்டு, போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.