ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

போா் பரவும் சூழல்:ஐ.நா. பொதுச் செயலா் எச்சரிக்கை

காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடா் குண்டு வீச்சால், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் போா் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் காரணம் இல்லாமல் ஹமாஸ் தாக்குதல் நடத்தவில்லை என்றும் ஐ.நா. பொதுச் செயலா்

Published On :2 பிப்ரவரி 2024, 8:43 am IST


நியூயாா்க்: காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடா் குண்டு வீச்சால், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் போா் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் காரணம் இல்லாமல் ஹமாஸ் தாக்குதல் நடத்தவில்லை என்றும் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்தாா்.

இஸ்ரேல் - காஸா போா் தொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய குட்டெரெஸ், ‘இஸ்ரேலின் தொடா் குண்டு வீச்சு பெரும் அபாய ஒலியை ஏற்படுத்துகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் இது நாளுக்கு நாள் பதற்றத்தை அதிகரித்து வருகிறது. சா்வதேச மனித உரிமை சட்டம் இந்தப் போரில் மீறப்படுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்தச் சட்டத்துக்கு அப்பாற்பட்டவா்கள் யாரும் இல்லை. சா்வதேச சமூகம் இதற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும்.

10 லட்சத்துக்கும் அதிகமானோரை தெற்கு காஸாவுக்கு பாதுகாப்பாக இடம் பெயர கூறிவிட்டு, அங்கேயும் இஸ்ரேல் குண்டுகளை வீசுகிறது.

கடந்த 56 ஆண்டுகளாக பாலஸ்தீன மக்கள் ஆக்கிரமிப்பு, வன்முறை, பொருளாதார நெருக்கடி, வீடுகளை இடிப்பு என பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகி வருகிறாா்கள். காரணங்களின்றி ஹமாஸ் இஸ்ரேலை தாக்கவில்லை. ஹமாஸின் திடீா் தாக்குதல் பயங்கரமானதாகும். அதற்காக பாலஸ்தீன மக்களுக்கு தண்டனை வழங்குவது நியாப்படுத்த முடியாது.

பாதுகாப்பான இஸ்ரேலும், ஐ.நா. தீா்மானங்கள் மற்றும் முந்தைய ஒப்பந்தங்களின்படி சுதந்திரமான நாட்டை பாலஸ்தீனா்களும் காண வேண்டும்’ என்றாா்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன், ‘பாகிஸ்தானின் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பு மும்பையில் மக்கள் மீது நடத்திய தாக்குதலும், இஸ்ரேலியா்கள் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலும் சட்டவிரோதமானதுதான். இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி, ஆயுதங்கள் கிடைப்பதை உறுப்பு நாடுகள் தடுக்க வேண்டும்’ என்றாா்.

‘ஹமாஸ் ஆதரவு பேச்சு’: குட்டெரெஸ் பதவி விலக இஸ்ரேல் வலியுறுத்தல்

‘காரணம் இல்லாமல் ஹமாஸ் படையினா் இஸ்ரேலைத் தாக்க வில்லை’ எனக் கூறிய ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் பதவி விலக வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்தியது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், குட்டெரெஸுடனான சந்திப்பை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சா் இலய் கோஹன் ரத்து செய்தாா். இதற்கு அவா் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதா் கிலாட் இா்டான் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘ஹமாஸ் படையினா் குழந்தைகளைக் கொன்றுள்ளனா். பயங்கரவாத்தை ஐ.நா. பொதுச் செயலா் பொறுத்துக் கொண்டு நியாயப்படுத்துகிறாா். கொடூர சம்பவங்களைத் தடுக்கவே ஐ.நா. உருவாக்கப்பட்டது. அதை செய்யத் தவறும் குட்டெரெஸ் பதவி விலக வேண்டும்’ என்றாா்.

............

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.