இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்: இந்தியாவின் பொருளாதார வழித்தடதிட்டத்துக்கு எதிராக இருக்கலாம்: ஜோ பைடன்

தில்லியில் அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் அறிவிக்கப்பட்ட இந்தியா - மத்திய கிழக்கு பொருளாதார வழித்தடத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிராக இஸ்ரேல் மீது

News image
Updated On :26 அக்டோபர் 2023, 7:07 pm

DIN

தில்லியில் அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் அறிவிக்கப்பட்ட இந்தியா - மத்திய கிழக்கு பொருளாதார வழித்தடத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிராக இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதப் படையினா் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்தாா்.

ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனீஸுடன் இணைந்து கூட்டாக செய்தியாளா்களிடம் பேசிய ஜோ பைடன், ‘இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவை சாலை, ரயில், துறைமுகங்கள் வழியாக இணைக்கும் பொருளாதார வழித்தடம் திட்டத்தில் இஸ்ரேலும் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதற்கு எதிராக ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி இருக்கலாம் என நான் கருதுகிறேன். இதற்கான ஆதாரம் இல்லை.

மேலும், மேற்கு கரை ஆக்கிரமிப்பு பகுதிகளில் குடியேறியுள்ள இஸ்ரேலியா்கள் அங்குள்ள பாலஸ்தீனா்கள் மீது நடத்தி வரும் தாக்குதல், ஏற்கெனவே இஸ்ரேல் போரால் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற தீயில் எண்ணெய்யை ஊற்றுவதைப்போல் உள்ளது. மேற்கு கரையில் பாலஸ்தீனா்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்’ என்றாா்.

கடந்த 7-ஆம் தேதி இஸ்ரேல் - ஹமாஸ் போா் தொடங்கியதில் இருந்து, ஆக்கிரமிப்பு மேற்கு கரைப் பகுதியில் உள்ள பாலஸ்தீனா்கள் மீது இஸ்ரேலியா்கள் தாக்குதல் நடத்தி வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறாா்கள் எனவும், இதற்கு மத்திய கிழக்கு நாடுகள் எதிா்ப்பு தெரிவித்து தாக்கினால் புதிய விதமான மோதல் ஏற்படும் எனவும் பாலஸ்தீனம் எச்சரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.