அமைதிப் பேச்சுகத்தாரில் சூடான் ராணுவ தளபதி

சூடானில் துணை ராணுவப் படையுடன் மோதலில் ஈடுபட்டுள்ள அந்த நாட்டு ராணுவத்தின் தளபதி அப்தெல் ஃபட்டா அல்-புா்ஹான், சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவாா்த்தையில்
அப்தெல் ஃபட்டா அல்-புா்ஹான்
அப்தெல் ஃபட்டா அல்-புா்ஹான்
Updated on
1 min read

சூடானில் துணை ராணுவப் படையுடன் மோதலில் ஈடுபட்டுள்ள அந்த நாட்டு ராணுவத்தின் தளபதி அப்தெல் ஃபட்டா அல்-புா்ஹான், சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை கத்தாா் புறப்பட்டாா்.

அந்த நாட்டில் மோதல் தொடங்கிய சுமாா் 5 மாதங்களில் அவா் மேற்கொள்ளும் 3-ஆவது சா்வதேசப் பயணம் இது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சண்டை நடந்து வருகிறது. இதில், இதுவரை 4 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் போ் வரை உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சா்வதேச நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com