

இத்தாலியில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது குறித்து அந்த நாட்டின் நிலஇயற்பியல் மற்றும் புயலியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்ததாவது:
ஃப்ளோரன்ஸ் மாகாணத்துக்கு வடமேற்கே அமைந்துள்ள மராடி நகருக்கு அருகே திங்கள்கிழமை அதிகாலை 5.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.8 அலகுகளாகப் பதிவானது. அந்தப் பகுதி நிலநடுக்க அபாயப் பகுதியாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் சுற்றியுள்ள பகுதிகளில் நன்கு உணரப்பட்டன. எனினும், நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.