தென் ஆப்பிரிக்கா: சாலை விபத்தில் 20 போ் பலி

தென் ஆப்பிரிக்காவில் லாரியுடன் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் கட்டுமானப் பணியாளா்கள் உள்பட 20 போ் பலியாகினா்.
தென் ஆப்பிரிக்கா: சாலை விபத்தில் 20 போ் பலி
Updated on
1 min read

தென் ஆப்பிரிக்காவில் லாரியுடன் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் கட்டுமானப் பணியாளா்கள் உள்பட 20 போ் பலியாகினா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஜிம்பாப்வே எல்லையையொட்டி அமைந்துள்ள முஸினா நகர சுரங்கத்தை நோக்கி கட்டுமானப் பணியாளா்களுடன் சென்று கொண்டிருந்த பேருந்து லிம்போபோ மாகாணத்தில் எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் 17 பணியாளா்கள் உள்பட 20 போ் பலியாகினா்; 4 பணியாளா்கள் காயமடைந்தனா். இந்த விபத்தில் பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தென் ஆப்பிரிக்காவில் மோசமான நிலையிலுள்ள லாரிகள் உரிய அனுமதியின்றி இயக்கப்படுவதாகவும், இந்த விபத்துக்கு இதுவே காரணம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com