இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

இந்தியாவுக்கு வந்தாரா ஷேக் ஹசீனா?

வங்கதேச நாட்டில் இருந்து வெளியேறிய அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தில்லிக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
ஷேக் ஹசீனா- DIN
Updated On :5 ஆகஸ்ட் 2024, 12:24 pm

DIN

வங்கதேச நாட்டில் இருந்து வெளியேறிய அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா, தில்லிக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்தும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும் கடந்த 3 வாரங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் இதுதொடர்பான வன்முறையில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

தொடர் போராட்டத்தையடுத்து, வங்கதேச பிரதமர் பதவியை ஹசீனா ராஜிநாமா செய்ததாகவும், அங்கு ராணுவ ஆட்சி அமைக்கப்படுவதாகவும் வங்கதேச ராணுவத் தளபதி இன்று அறிவித்துள்ளார்.

பிரதமர் ஷேக் ஹசீனா, தலைநகர் டாக்காவில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் வெளியேறியதாகவும் C-130 என்ற அந்த விமானம் தில்லியை நோக்கி வருவதாகவும் தகவல்கள் வந்தன.

பாட்னாவை கடந்து உத்தரபிரதேச -பிகார் எல்லையை அடைந்து விமானம் தற்போது தில்லி ஹிண்டன் விமானப்படை தளத்தை அடைந்துள்ளதாகவும் அவர் அங்கிருந்து லண்டன் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உளவுத்துறை உள்ளிட்ட இந்திய பாதுகாப்பு முகமைகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. தில்லியில் வங்கதேச தூதரகம் உள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தாங்குவாரா? என ஏஎன்ஐ ஊடகத்திற்கு பதில் அளித்த வங்கதேசத்துக்கான முன்னாள் தூதர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, 'ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்ட பின்னர், 1975 முதல் 1979 வரை இந்தியாவில் இருந்தார். இந்தியா பாதுகாப்பான இடம் என்பது மறுப்பதற்கு இல்லை. ஆனால், அவர் எங்கு வேண்டுமானாலும் செல்ல வாய்ப்புள்ளது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.