அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்புதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

அமெரிக்கப் பாடகர் டிராவிஸ் ஸ்காட் பாரீஸில் கைது!

ஹோட்டல் பாதுகாவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கைது

News image

டிராவிஸ் ஸ்காட் (கோப்புப் படம்) - இன்ஸ்டாகிராம் / டிராவிஸ் ஸ்காட்

Updated On :9 ஆகஸ்ட் 2024, 5:40 pm IST

ஒலிம்பிக் பேரணியில் கலந்துகொண்ட அமெரிக்கப் பாடகர் டிராவிஸ் ஸ்காட், ஹோட்டல் பாதுகாவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார்.

ஒலிம்பிக் ஆண்கள் கூடைப்பந்து அரையிறுதியில், செர்பியாவுக்கு எதிரான அமெரிக்கப் பேரணியில் கலந்து கொள்ள, ராப்பரும் பாடகருமான டிராவிஸ் ஸ்காட், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குச் சென்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பாரிஸின் ஜார்ஜஸ் வி சொகுசு ஹோட்டலில் டிராவிஸ் தங்குவதற்காகச் சென்றுள்ளார். இந்த நிலையில், டிராவிஸுக்கும் அவரது மெய்க்காப்பாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அவர்கள் இருவருக்கும் இடையிலான வாக்குவாதத்தைத் தடுக்க, ஹோட்டலின் பாதுகாவலர் முன்வந்துள்ளார். ஆனால், ஹோட்டல் தடுக்கச் சென்ற பாதுகாவலருக்கும் டிராவிஸுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஹோட்டலில் ரகளையில் ஈடுபடுவதாகக் கூறி, டிராவிஸ் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஹோட்டலுக்கு விரைந்த காவல்துறையினர், ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் டிராவிஸைக் கைது செய்தனர்.

இருப்பினும், டிராவிஸ் ரகளை செய்ததன் காரணம் குறித்த தகவல்களைக் காவல்துறையினர் தெரிவிக்கவில்லை.

புளோரிடாவில் ஒரு படகில் இடையூறு செய்ததாகக் கூறி, டிராவிஸ் ஸ்காட் கடந்த ஜூன் மாதத்தில் போதைப்பொருள் உபயோகித்தல் மற்றும் அத்துமீறல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.