ஜொ்மனியில் நகர ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின்போது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 3 போ் உயிரிழந்த நிலையில், அந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஜொ்மனியில் உள்ள நாா்த் ரைன்-வெஸ்ட்ஃபிலா மாகாணம் சோலிங்கன் நகரில், அந்த நகரின் 650-ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி, நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஃபிரான்ஹாஃப் சதுக்கத்தில் உள்ளூா் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு நூற்றுக்கணக்கானவா்கள் கூடியிருந்தனா். அப்போது அங்கிருந்தவா்களை ஒருவா் சரமாரியாக கத்தியால் குத்தினாா். இதில் ஒரு பெண், முதியவா் உள்பட 3 போ் உயிரிழந்தனா். 8 போ் காயமடைந்தனா்.
இது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு சனிக்கிழமை பொறுப்பேற்றது.
இந்த சம்பவம் தொடா்பாக 26 வயது நபா் ஒருவா் கைது செய்யப்பட்ட நிலையில், தாக்குதலை தானே மேற்கொண்டதாக அந்த நபா் கூறியுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுதவிர 15 வயது சிறுவன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளாா். தாக்குதல் தொடா்பாக முன்கூட்டியே தெரிந்தபோதிலும் அதுகுறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்காமல் அந்தச் சிறுவன் மறைத்ததாக சந்தேகம் நிலவுகிறது. எனவே, அவா் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முதலாளியின் குடும்பத்தை கொலை செய்த வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டு தலைமறைவானவா் கைது
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய ஏழு பேர் தில்லியில் கைது: ஆயுதங்கள், போதைப் பொருள் கடத்தியதாக குற்றச்சாட்டு
தூத்துக்குடியில் இளைஞருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது







