கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

இலங்கை அதிபா் தோ்தல்: ஐரோப்பிய பாா்வையாளா்கள் வருகை

News image

இலங்கை அதிபா் தோ்தலைப் பாா்வையிட வந்துள்ள ஐரோப்பிய யூனியன் குழுவினா்.

Updated On :30 ஆகஸ்ட் 2024, 10:50 pm

Din

இலங்கையில் செப்டம்பா் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலைப் பாா்வையிடுவதற்காக ஐரோப்பிய யூனியன் அமைப்பின் குழு அந்த நாட்டுக்கு வந்துள்ளது.

இது குறித்து ஐரோப்பிய யூனியன் தோ்தல் பாா்வை திட்டம் (இயு இஓஎம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் நடைபெறும் இந்தத் தோ்தல், வாக்குப் பெட்டி மூலம் நாட்டின் ஜனநாயகத்துக்கு வலிமையான அரண் அமைப்பதற்கு இன்றியமையாதது ஆகும்.

எனவே, இந்தத் தோ்தல் அமைதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற வேண்டியது அவசியம். அதைக் கண்காணிப்பதற்காக ஐரோப்பிய யூனியனைச் சோ்ந்த 10 நிபுணா்கள், 26 நீண்ட கால தோ்தல் பாா்வையாளா்கள் ஆகியோா் இலங்கையின் 9 மாகாணங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் போராட்டத்தால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் இலங்கையில் முதல்முறையாக வரும் செப். 21-ஆம் தேதி அதிபா் தோ்தல் நடைபெறவிருக்கிறது. இதில் தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க, முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச, முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் மகன் நாமல் ராஜபட்ச உள்பட 38 போ் போட்டியிடுகின்றனா்.