கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஜார்ஜியா: உணவகத்தில் விஷ வாயு கசிவு -11 இந்தியர்கள் பலி!

இந்திய உணவகம் ஒன்றில் கார்பன் மோனாக்சைட் வாயு கசிந்து விபத்து

Published On :

ஜார்ஜியாவில் இயங்கி வரும் இந்திய உணவகம் ஒன்றில் கார்பன் மோனாக்சைட் வாயு கசிந்து விபத்து நேர்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடாவ்ரி பகுதியிலுள்ள மலை வாசஸ்தல உணவகத்தில் நிகழ்ந்துள்ள விபத்தில் அங்கிருந்த இந்தியர்கள் 11 பேர் உயிரிழந்திருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிலிசியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து அளித்துள்ள தகவலின்படி, விபத்தில் உயிரிழந்த 11 பேரும் மேற்கண்ட உணவகத்தில் பணிபுரிந்த இந்தியத் தொழிலாளர்கள் என தெரிவித்துள்ளனர்.

இந்திய தூதராகம் வெளியிட்டுள்ள பதிவில், ஜார்ஜியாவின் குடாவ்ரியில் 11 இந்தியர்கள் பலியான சம்பவம் வருத்தமளிப்பதாகவும், பலியானோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் உடல்களை தாயகம் எடுத்து வரும் நடவடிக்கைகளில் அங்குள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து தூதரக அதிகாரிகள் பணியாற்றி வருவதாகவும், உயிரிழந்தோரின் குடும்பங்களுடன் தொடர்பிலிருப்பதாகவும் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.