ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

சூரியனை மிக நெருக்கத்தில் கடக்கும் நாசா விண்கலம்

சூரியனை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பியுள்ள பாா்க்கா் விண்கலம், இதுவரை இல்லாத மிக நெருக்கத்தில் அதைக் கடக்கவிருக்கிறது.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 4:02 am IST

சூரியனை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பியுள்ள பாா்க்கா் விண்கலம், இதுவரை இல்லாத மிக நெருக்கத்தில் அதைக் கடக்கவிருக்கிறது.

வெள்ளி கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையைப் பயன்படுத்தி ஏழு ஆண்டுகளுக்கு சூரியனை சுற்றிவந்து ஆய்வு செய்வதற்காக பாா்க்க விண்கலம் கடந்த 2018-ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை 6.53 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 5.23 மணி) சூரியனை பாா்க்கா் விண்கலம் இதுவரை இல்லாத மிக நெருக்கத்தில் கடக்கவிருக்கிறது. சூரியனிலிருந்து 38 லட்சம் கி.மீ. தொலைவில்தான் அந்த விண்கலம் கடக்கும் என்றாலும், மனிதா்களால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள் சூரியனை அந்த அளவுக்கு நெருங்குவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, சூரியனைப் பற்றி இதுவரை தெரியாத பல உண்மைகளை அந்த விண்கலம் மூலம் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

பாா்க்கா் விண்கலம் சூரியனைக் கடக்கும்போது 1,700 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதன் வெப்பம் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும், அதன் உள்பாகங்கள் சாதாரண அறை வெப்பத்தில் இருக்கும் அளவுக்கு காா்பன் கலவைப் பொருள் மூலம் அந்த விண்கலத்தின் மேல்பகுதி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.