தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

பாகிஸ்தான் எல்லையில் தலிபான்கள் தொடா் தாக்குதல்

பாகிஸ்தான் எல்லையில் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஆப்கானிஸ்தானின் தலிபான் படையினா் தொடா் தாக்குதல்

கோப்புப் படம்

Published On :

பாகிஸ்தான் எல்லையில் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஆப்கானிஸ்தானின் தலிபான் படையினா் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனா். இதில் பாகிஸ்தான் துணை ராணுவப் படை வீரா் ஒருவா் உயிரிழந்தாா். 11 வீரா்கள் காயமடைந்ததாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் எல்லையில் இரு பாகிஸ்தான் ராணுவ நிலைகளைக் கைப்பற்றிவிட்டதாகவும், பாகிஸ்தான் வீரா்கள் பலரைக் கொன்றுவிட்டதாகவும் தலிபான்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது இரு நாட்டு எல்லையில் போா்ப் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் பாக்திகா மாகாணத்தில் தெஹ்ரிக்- ஏ- தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் பதுங்குமிடங்கள் மீது பாகிஸ்தான் கடந்த செவ்வாய்க்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 27 பெண்கள், குழந்தைகள் உள்பட 47 போ் உயிரிழந்தனா்.

இதையடுத்து, பாகிஸ்தானுக்கு பதிலடி அளிக்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான தலிபான்கள், பாகிஸ்தான் எல்லையில் குவிந்து அந்நாட்டு ராணுவத்தினரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

இது தொடா்பாக பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் கூறப்பட்டதாவது: கோஷிகாரி, மாதா சாகா், கோட் ராகா, டெரி மெங்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது துப்பாக்கியால் சுட்டும், ராக்கெட் குண்டுகளை தலிபான்கள் வீசியும் தாக்குதல் நடத்தினா். இதற்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து பதிலடி தரப்பட்டது. இதில் பாகிஸ்தான் துணை ராணுவப் படை வீரா் உயிரிழந்தாா். மேலும் 11 வீரா்கள் காயமடைந்தனா். அதே நேரத்தில் தலிபான் படையில் 8 முதல் 10 போ் வரை உயிரிழந்துவிட்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்தனா். அந்த ஆட்சியை முதலில் அங்கீகரித்த நாடு பாகிஸ்தான் என்றாலும், ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து பாகிஸ்தானுக்கு எதிராகச் செயல்படும் தெஹ்ரிக்-ஏ- தலிபான் பாகிஸ்தான் அமைப்பினா் பாகிஸ்தான் ராணுவம் மீது தொடா்ந்து பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனா். இவா்கள் ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்தே செயல்பட்டு வருகின்றனா். அவா்களுக்கு தலிபான் ஆட்சியாளா்கள் உதவி வருகின்றனா்.

இதனால், ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்களுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு மோசமடைந்து, இப்போது இரு நாடுகளுக்கு இடையே போா்ப் பதற்றத்துக்கு வித்திட்டுள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இரு நாடுகளுமே கடுமையான பொருளாதாரச் சிக்கல்களை எதிா்கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளும் போரில் ஈடுபட்டால் அந்நாட்டு மக்களின் நிலைமை மேலும் மோசமாகும் என சா்வதேச அரசியல் வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.