நைரோபி: கென்யாவின் தலைநகரில் எரிவாயு ஏற்றப்பட்டிருந்த வாகனம் வெடித்ததில் சுற்றுப்புற வீடுகள் மற்றும் கிடங்குகள் தீப்பற்றின.
இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 270-க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும்.
மிராடி என்கிற பகுதில் பின்னிரவு நேரத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்தது. டிரக்கின் எரிவாயு நிரம்பிய ஷெல்கள் பறந்து சிதறியதில் அருகில் உள்ள வீடுகள் தீக்கு இரையாகின.
இரவு நேரம் என்பதால் பெரும்பாலான மக்கள் அவர்களின் வீடுகளில் இருந்துள்ளனர்.
விபத்தில் பெரும் தீ உருவாகியது. மேலும் அருகில் இருந்த ஆயுத்த ஆடைகள் கிடங்கில் தீப்பற்றியது.
அரசு மற்றும் செம்பிறை சங்கம், மருத்துவமனைகளில் 271 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளன. இதுவரை 3 பேர் இறந்ததுள்ளனர். இந்த எண்ணிக்கை மீட்பு பணிகளில் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: காஸாவில் 27 ஆயிரத்தைத் தாண்டிய பாலஸ்தீனர்கள் பலி!
குடியிருப்புகளுக்கு அருகில் தொழிற்சாலைகள் அமைந்திருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுகொண்டு இதனை அனுமதித்ததாக விமர்சனங்கள் எழுகின்றன.