தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

30 மாடிக் கட்டடம் முழுக்க கிறுக்கல்: யார் கைவண்ணம்?

கைவிடப்பட்ட அடுக்கு மாடிக் கட்டடத்தை ஓவியம் வரைய களமாக பயன்படுத்தியவர்களைக் காவலர்கள் தேடி வருகின்றனர்.

News image

கிராபிட்டி கலைஞர்கள் பயன்படுத்திய கட்டடம்| AP

Updated On :3 பிப்ரவரி 2024, 3:06 am

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கிராஃபிட்டி எனப்படும் சுவர் சித்திரெழுத்து பரவலாக உள்ளது. இந்த கலைஞர்கள் அடிக்கடி சட்ட விரோதமாக கட்டடங்களில் கிராஃபிட்டியை வரைந்து செல்கிறார்கள்.

இந்த முறை, வருகிற ஞாயிற்றுக்கிழமை கிராமி விருதுகள் நிகழ்வு நடைபெறவிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள கைவிடப்பட்ட 30 மாடி கட்டடத்தைத் தங்கள் கைவண்ணத்தால் அலங்கரித்துள்ளனர். காவலர்கள் தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

கிறுக்கல்களால் நிரம்பிய கட்டட பக்கவாட்டு கண்ணாடிகள் | AP

கிறுக்கல்களால் நிரம்பிய கட்டட பக்கவாட்டு கண்ணாடிகள் | AP

2019-ல் கைவிடப்பட்ட, பாதி கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்தின் 27-வது மாடி வரை சுவர் சித்திரெழுத்தைக் காண முடிகிறது.

இவை விரைவில் நீக்கப்படும் எனவும் மேலும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது எனவும் நகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இரவு 12.43 மணிக்கு அத்துமீறி நுழைந்த குழுவினரை காவல் ஹெலிகாப்டர் பார்த்ததாகவும் அவர்கள் இந்த வேலையைச் செய்திருப்பதாக சந்தேகிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.