ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

ஈரானில் குண்டுவெடிப்பு: 73 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் படுகாயம்!

ஈரானில் புதன்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் 73 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

News image
கோப்புப்படம்
Updated On :7 பிப்ரவரி 2024, 3:25 pm

DIN

ஈரானில் புதன்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் 73 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

2020 ஆம் ஆண்டு அமெரிக்க வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின்  ராணுவ ஜெனரல் காஸிம் சுலைமானிக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (ஜன.3) நடைபெற்றது. அந்த நிகழ்வின்போது குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. 

ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து தென்கிழக்கே 820 கிலோமீட்டர் தொலைவில் கெர்மானில் உள்ள அவரது கல்லறைக்கு அருகில் இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 73 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 170க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

புரட்சிகர காவல்படையின் தலைவராக இருந்த காசிம் சுலைமானி ஜனவரி 2020ல் அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.