ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

ஈரானில் குண்டுவெடிப்பு: 73 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் படுகாயம்!

ஈரானில் புதன்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் 73 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

News image

கோப்புப்படம்

Updated On :3 ஜனவரி 2024, 7:22 pm IST

ஈரானில் புதன்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் 73 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

2020 ஆம் ஆண்டு அமெரிக்க வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின்  ராணுவ ஜெனரல் காஸிம் சுலைமானிக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (ஜன.3) நடைபெற்றது. அந்த நிகழ்வின்போது குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. 

ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து தென்கிழக்கே 820 கிலோமீட்டர் தொலைவில் கெர்மானில் உள்ள அவரது கல்லறைக்கு அருகில் இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 73 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 170க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

புரட்சிகர காவல்படையின் தலைவராக இருந்த காசிம் சுலைமானி ஜனவரி 2020ல் அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.