ஈரானில் நடந்த இரட்டை குண்டுவெடிப்புத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது. இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
இந்தத் தாக்குதலில் காயப்பட்டிருந்த 8 வயது சிறுவன் மற்றும் 67 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நாட்டின் அவசர சேவை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இன்னும் 102 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். அதில் 11 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஈயத்துடன் ஆப்பிள்சாஸில் கலந்திருக்கும் மற்றுமொரு நச்சுப்பொருள்
ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து தென்கிழக்கில் 820 கிலோமீட்டர்களுக்கு அப்பால் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. தற்கொலைப் படையால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
முதல் வெடிகுண்டு வெடித்த பின்னர், மீட்புப்பணிக்காக பணியாளர்களும் மக்களும் அங்கு கூட, 20 நிமிட இடைவெளியில் மற்றொரு குண்டும் வெடிக்கவைக்கப்பட்டு பெறும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக 11 பேரை இதுவரைக் கைது செய்யப்பட்டுள்ளனர்.