கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையத்தில் உள்ள விமான பொறியியல் பணியகத்தில் வாயு கசிவு ஏற்பட்டத்தில் 39 ஊழியர்கள் பாதிக்கப்பட்டதாக வெள்ளிக்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயணிகள் முனையத்தில் இருந்து தனித்திருக்கும் விமான பொறியியல் பணியகத்தில் அங்கு பணிபுரிந்த வெவ்வேறு நிறுவனங்களை சார்ந்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வாயு கசிவால் ஊழியர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் அவர்களில் 14 பேர் விமான நிலையத்தில் உள்ள அவசர சிகிச்சை மையத்துக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்ம பெட்ரோலிய வாயுவில் சேர்க்கப்படும் மெத்தில் மெர்காப்டன் என்கிற வாயு, உபயோகிக்கப்படாத கலனிலிருந்து கசிந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தூத்துக்குடி விமான நிலையத்தில் விஜய்க்கு வரவேற்பு

தாய்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட ரெளடி சாஹில் தில்லி விமான நிலையத்தில் கைது

மேற்காசிய போரால் இந்திய விமான நிறுவனங்கள் பாதிப்பு: 10,000 சர்வதேச விமானங்கள் ரத்து!

விமான நிலையத்தில் பிறந்த நாளைக் கொண்டாடிய ரஷ்மிகா!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


