செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

10 செயலிகளை அதிரடியாக நீக்கிய கூகுள்: காரணம் என்ன?

கூகுள் ப்ளே ஸ்டோரில் சேவை கட்டணம் செலுத்தாத 10 செயலிகள் நீக்கப்பட்டன.

News image

கோப்புப் படம் - dotcom

Updated On :1 மார்ச் 2024, 8:33 pm IST

பிரபலமான திருமண பொருத்த சேவைகள் வழங்கும் செயலிகள் உள்பட கூகுள் 10 செயலிகளை தனது ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.

கூகுளின் தளத்திலிருந்து லாபம் ஈட்டும் இந்த நிறுவனங்கள் கூகுளின் கட்டண மாற்ற கொள்கையோடு பொருந்தாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எந்த செயலிகள் நீக்கப்பட்டுள்ளன என்பது குறித்து கூகுள் தெரிவிக்கவில்லை. எனினும் திருமண பொருத்த செயலிகளான சாதி, மேட்ரிமோனி.காம் மற்றும் பாரத் மேட்ரிமோனி உள்ளிட்ட செயலிகள் தற்போது கிடைக்கவில்லை.

அதே போல வலைத்தொடர் செயலியான பாலாஜி டெலிபிலிம்ஸ் ஆல்ட் (ஆல்ட்பாலாஜி), ஆடியோ தளமான குக்கூ எஃப்எம், டேட்டிங் செயலிகளான குவாக் குவாக், ட்ரூலி, மேட்லி ஆகிய செயலிகளும் ப்ளே ஸ்டோரில் கிடைக்கவில்லை.

நீக்கப்பட்ட செயலிகள்

நீக்கப்பட்ட செயலிகள்

இந்திய போட்டி ஆணையம் முந்தைய கட்டண கட்டுபாட்டைத் தளர்த்தி அதிகபட்ச வரம்பினை 15 சதவிகிதத்தில் இருந்து 30 சதவிகிதமாக உயர்த்தியது.

செயலிகள் வழியாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கான கட்டணமாக கூகுள் பெற்று வந்த 11 சதவிகிதம் என்பது 26 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது.

நீதிமன்றத்திற்கு இதனை கொண்டு சென்ற செயலிகள் தற்கால தடை கோரின. நீதிமன்றம் தடை வழங்க மறுத்தது.

இதன் தொடர்ச்சியாக கூகுள் செயலிகளை நீக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து கூகுள் வெளியிட்ட குறிப்பில், கூகுளில் இருந்து மகத்தான மதிப்பு பெற்ற போதும் கட்டணம் செலுத்த நன்கு அறியப்பட்ட 10 நிறுவனங்கள் மறுத்துள்ளன எனத் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.