தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

47 உக்ரைன் ட்ரோன்கள் அழிப்பு: ரஷியா

47 உக்ரைன் ட்ரோன்கள் அழிப்பு: ரஷியா

News image
Updated On :9 மார்ச் 2024, 9:50 pm

தங்களது தெற்குப் பிராந்தியங்களில் உக்ரைன் ஏவிய 47 ட்ரோன்கள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரஷியாவின் வான்பாதுகாப்பு ஏவுகணைகளால் 47 உக்ரைன் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன. அதிகபட்சமாக ரொஸ்தொவ் பகுதியில் 41 ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டன. இது தவிர, வொல்கரோடில் 3 ட்ரோன்கள், கா்ஸ்கில் 2 ட்ரோன்கள், பெல்கராட் பகுதியில் ஒரு ட்ரோன் என 6 உக்ரைன் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களை ஆக்கிரமித்தது. மேலும், உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷியா தொடா்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்திவருகிறது.

உக்ரைனும் அவ்வப்போது ஏவுகணைகள், ட்ரோன்கள், கடல் ட்ரோன்கள் (ஆளில்லா படகுகள்) மூலம் ரஷிய நிலைகளில் தாக்குதல் நடத்திவருகிறது. ..படவரி... கோப்புப்படம்...