பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

விண்வெளியிலிருந்து இரண்டு எரிகற்கள் பூமியை மிக அருகில் நெருங்கி வருவதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, இவ்விரண்டு எரிகற்களும் வெவ்வேறு கூட்டத்திலிருந்து வருவதாகவும், வெவ்வேறு வேகத்தில் வந்துகொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த எரிகற்களால் பூமிக்கு ஆபத்து ஏற்படுமா? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் நாசா விவரித்துள்ளது.

வேகமாக வரும் எரிகல்

முதல் எரிகல்லுக்கு இந்த ஆண்டின் எண்ணுடன் சேர்த்து எச்கே1 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது அப்பல்லோ எரிகல் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் சுற்றுவட்டப்பாதை பூமியின் பாதையை அவ்வப்போது குறுக்காக கடந்துசெல்வது வழக்கம். இது கிட்டத்தட்ட 99 அடி (30.14 மீட்டர்கள்) நீளம்கொண்டது. தோராயமாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு வணிக விமானம் அளவுக்கு பெரியதாக இருக்குமாம்.

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?
காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

அளவில் மிகப்பெரியதுதான் என்றாலும் இது பூமிக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று நாசா விளக்கம் கொடுத்துள்ளது.

மே 4ஆம் தேதி இந்த விண்கல் பூமியை மணிக்கு 31,114 கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கவிருக்கிறது. நல்வாய்ப்பாக இந்த எரிகல்லுக்கும் பூமிக்கும்இடையில் கிட்டத்தட்ட 6,88,896 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. இது தோராயமாக பூமிக்கும் நிலவுக்கும் உள்ள இடைவெளியை விட 1.8 மடங்கு அதிகமாகும்.

அடுத்து காத்திருக்கும் அமைதிப்படை

இரண்டாவது எரிகல்லுக்கு 2024 ஜேஇ என பெயரிடப்பட்டுள்ளது. இது அமோர் எரிகல் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது அப்போல்லோ குழு எரிகல்லைப் போல அல்லாமல், அமோர்ஸ் எரிகல், பூமியின் வட்டப்பாதையிலிருந்து வெளியிலிருந்து வந்துகொண்டிருக்கிறது. இதன் அளவு 165 அடி (50 மீட்டர்) என கணக்கிடப்பட்டுள்ளது. இதுஅளவிலும் மிகப்பெரியதாகவே உள்ளது. மணிக்கு 27,926 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து வருகிறது. இதுவும் மே 4ஆம் தேதி பூமியைக் கடக்கிறது. இது அளவில் மிகப்பெரியதாக இருந்தாலும், பூமியை விட தொலைவில் கடந்து செல்வதால் ஆபத்து இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது.

தொடர் கண்காணிப்பில் நாசா

நாசா தொடர்ந்து எரிகற்களை கண்காணித்து வருகிறது. பூமிக்கு ஏதேனும் அச்சுறுத்தலை ஏற்படுத்துமோ என்று எப்போதும் கண்காணிப்பிலேயே இருக்கும். வழக்கமாக 140 மீட்டரை விட பெரிய எரிகற்கள்தான் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம். அதுவும் பூமியின் வட்டப்பாதைக்குள் வந்தால்தானாம். நல்லவேலையாக, 2024 எச்கே 1 மற்றும் ஜேஇ இரண்டுமே புவி வட்டப்பாதைக்குள் வெளியே செல்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com