கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மேற்குக் கரையில் 7 பாலஸ்தீனர்கள் பலி!

மேற்குக் கரையில் இஸ்ரேல் தாக்குதலில் 7 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

News image

ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவ வாகனங்கள்

ஏபி

Updated On :21 மே 2024, 10:22 am

DIN

மேற்குக் கரையின் வடக்கு நகரமான ஜெனினில், இஸ்ரேல் ராணுவத்தின் போர் நடவடிக்கையில் குறைந்தது 7 பாலஸ்தீனர்க்ள் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 9 பாலஸ்தீனர்கள் காயமுற்றதாகவும் அவர்களில் இருவர் நிலை மோசமாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

ஜெனின் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் கொல்லப்பட்டதாகவும் ஒரு ஆசிரியர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இஸ்ரேல் தாக்குதலில் காயமுற்றவரை அழைத்து செல்லும் பாலஸ்தீனர்கள்

இஸ்ரேல் தாக்குதலில் காயமுற்றவரை அழைத்து செல்லும் பாலஸ்தீனர்கள்

பாலஸ்தீன பயங்கரவாதிகள் குழு, இஸ்ரேல் சிறப்புப் படைகளுடன் மேற்குக் கரை நகரான ஜெனினில் மோதலில் ஈடுபட்டு வருகிறது. செய்தி நிறுவனங்கள் அளிக்கும் தகவல்படி அவர்கள் வெடிக்கக் கூடிய கருவிகளை பயன்படுத்துவதாகவும் தெரிகிறது.

இஸ்ரேல் ராணுவம், ஜெனின் நகரில் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் வலுவாக உள்ளதாக கருதுகிறது. காஸாவில் போர் தொடங்கியதுமுதல் இந்த பகுதியில் ராணுவத்தின் சோதனைகள் அடிக்கடி நடந்துவருகின்றன.

அக்.7 போர் தொடங்கியதிலிருந்து மேற்குக் கரையில் பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 490 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.