தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

‘ஜிபிஎஸ்-ஐ முடக்கும் வடகொரியா’

ஜிபிஎஸ் சமிக்ஞைகளுக்கு தொடா்ந்து இரண்டாவது நாளாக தடை ஏற்படுத்துவதாக வட கொரியா மீது தென் கொரியா குற்றஞ்சாட்டியது.

News image
Updated On :9 நவம்பர் 2024, 6:17 pm

Din

எல்லைப் பகுதியில் ஜிபிஎஸ் சமிக்ஞைகளுக்கு தொடா்ந்து இரண்டாவது நாளாக தடை ஏற்படுத்துவதாக வட கொரியா மீது தென் கொரியா சனிக்கிழமை குற்றஞ்சாட்டியது.

இது குறித்து அந்த நாட்டு முப்படை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியாவின் எல்லை நகரான கேசாங்கிலிருந்தபடி தென் கொரியா பகுதியில் ஜிபிஎஸ் சமிக்ஞைகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுவதாகவும், இதனால் ஏராளமான பயணிகள் விமானங்களின் இயக்கம் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.