கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைமை செய்தித் தொடர்பாளர் கொலை!

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவின் தலைமை செய்தித் தொடர்பாளர் முகமது அய்ப் கொல்லப்பட்டார்.

பெய்ரூட் புறநகரில் குண்டுவெடிப்பால் சூழ்ந்த கரும்புகை - AP

Published On :

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவின் தலைமை செய்தித் தொடர்பாளர் முகமது அய்ப் கொல்லப்பட்டார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக தெற்கு பெய்ரூட் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லா நிலைக்குழு முகாம்கள் உள்ள இடங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மூன்று நகரங்களைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தளபதிகள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், பெய்ரூட்டில் உள்ள ரஸ் அல் நபா பகுதியில் இஸ்ரேல் இன்று (நவ. 17) அதிரடி வான்வழி தாக்குதல் மேற்கொண்டது. இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் செய்தித்தொடர்பாளர் முகமது அஃபீப் கொல்லப்பட்டார்.

பெய்ரூட்டைச் சுற்றி நடத்தும் ஒவ்வொரு தாக்குதலின்போதும், முன்பே தாக்குதல் நடத்தும் இடங்களைச் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்ற இஸ்ரேல் பாதுகாப்புத் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால், இன்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முன்பு அவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவின் பல்வேறு தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்கள் கொல்லப்பட்டனர்.

பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையிலான போர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 முதல் நீடித்து வருகிறது. ஹமாஸ் படையினருக்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.