தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

உக்ரைனின் அண்டை நாட்டில் அதிபர் தேர்தல்! கள நிலவரம் என்ன?

உக்ரைனின் அண்டை நாட்டில் அதிபர் தேர்தல்: ரோமானியாவில் வாக்குப்பதிவு!

News image

மார்கெல் சியோலாகு (ரோமானியா பிரதமர்) - AP

Updated On :24 நவம்பர் 2024, 8:19 pm IST

ரோமானியாவில் அதிபர் தேர்தலுக்கான முதல் சுற்று வாக்குப்பதிவு இன்று(நவ. 24) நடைபெறுகிறது. ரோமானிய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 9 மணியுடன் நிறைவடையும். டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெறும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவின்போது அதிபர் தேர்வு செய்யப்படுவார்.

நேட்டோ கூட்டமைப்பில் ஓர் அங்கமாக இருக்கும் ரோமானியாவில், உள்நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, அண்டை நாடான உக்ரைனில் நீடிக்கும் சண்டை உள்ளிட்ட விவகாரங்கள் இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமென அங்குள்ள கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இவையனைத்தும் வலதுசாரி தலைவரான ஜார்ஜ் சிமியோனுக்கு சாதகமாகவே அமையும் என்ற கருத்தும் பரவலாக நிலவுகிறது.

ரோமானிய பிரதமரும் ‘ஷோசியல் ஜனநாயகக் கட்சி(பிஎஸ்டி)’ தலைவருமான மார்கெல் சியோலாகு தலைநகர் புச்சாரெஸ்ட் நகரில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் இன்று(நவ. 24) வாக்குப்பதிவு செய்தார்.

அந்நாட்டின் அதிபராக கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வரும் ‘க்ளாஸ் லோஹன்னிஸ்’ உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டவர். உக்ரைனுடன் சுமார் 650 கி.மீ. தொலைவுக்கு எல்லையை ரோமானியா பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story image

AP

ஐரோப்பா எங்கிலும் வலதுசாரிக் கட்சிகள் பரவலாக எழுச்சி பெற்றுவரும் நிலையில், ரோமானியாவிலும் சிமியோன் பக்கம் ஆதரவு அலை வீசுவதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு, தனது ஆதரவு எப்போதும் உண்டு என்று சொல்லிக்கொள்ளும் சிமியோன், டிரம்ப்பின் பாவனையிலேயே சிவப்பு நிற தொப்பியை தலையில் மாட்டிக்கொண்டு தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதும் உண்டு. உக்ரைனுக்கு ராணுவ உதவி செய்வதை எதிர்ப்பவரும்கூட.

அண்மையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிவாகை சூடிய நிலையில், அவரது பாணியில் ரோமானியாவில் சிமியோன் வெற்றிக்கொடியை நாட்டுவாரா என்பதற்கான விடை அடுத்த மாதம் தெரிந்துவிடும்.

அதிபர் போட்டியில் சற்று பின்தங்கியிருக்கும் மற்றொரு எதிர்க்கட்சித் தலைவரான பத்திரிகையாளர் எலேனா லாஸ்கோனிக்கும் வெற்றி வாய்ப்பில்லை என திட்டவட்டமாக மறுக்க முடியாத குழப்பமான அரசியல் சூழலே ரோமானியாவில் இப்போது நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.