ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கனடா, மெக்ஸிகோ, சீனா மீது கூடுதல் வரி விதிப்பு

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத அகதிகள் மற்றும் போதைப் பொருள்கள் வருவதைத் தடுப்பதற்காக கூடுதல் வரி..

News image
Updated On :26 நவம்பர் 2024, 8:41 pm

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத அகதிகள் மற்றும் போதைப் பொருள்கள் வருவதைத் தடுப்பதற்காக கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் மீது கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரியும் சீனா மீது 10 சதவீத வரியும் விதிக்கவிருப்பதாக அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.

இது குறித்து தனது சமூக ஊடகமான ‘ட்ரூத்’தில் அவா் வெளியிட்டுள்ள பதிவுகளில், வரும் ஜனவரி மாதம் 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே இந்த மூன்று நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்களுக்கும் கூடுதல் வரி விதிப்பதற்கான ஆணையில் கையொப்பமிடவிருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

மெக்ஸிகோ, கனடா நாடுகளில் இருந்து சட்டவிரோத அகதிகள் மற்றும் போதைப் பொருள்கள் வருவது நிற்கும்வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்று குறிப்பிட்ட அவா், அதைத் தடுத்து நிறுத்த அந்த நாடுகளால் முடியும் என்றாா்.

அமெரிக்காவுக்குள் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதை சீனா தடுக்கும் வரை அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீதும் 10 சதவீதம் கூடுதல் வரி சுமத்தப்படுவதாக டிரம்ப் கூறினாா்.

இந்த அறிவிப்புக்கு மூன்று நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.

இத்தகைய நடவடிக்கைகள் தங்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வா்த்தகப் போரை உருவாக்கும் என்று எச்சரித்துள்ள சீனா, அந்தப் போரில் யாரும் வெற்றி பெறமுடியாது என்று கூறியுள்ளது.