ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

உள்ளூா் செலாவணியில் பரிவா்த்தனை: பிரிக்ஸ் கூட்டுப் பிரகடனம்

Updated On :24 அக்டோபர் 2024, 2:45 am IST

பிரிக்ஸ் உச்சி மாநாட்டை தொடா்ந்து வெளியிடப்பட்ட கூட்டுப் பிரகடனத்தில், ‘எண்ம (டிஜிட்டல்) உள்கட்டமைப்பு துறையில் கூட்டு செயல்பாடுகளுக்கான சாத்தியக் கூறுகளை பிரிக்ஸ் நாடுகள் ஆராயும்.

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே நிதி ஒத்துழைப்பை மேம்படுத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது. பிரிக்ஸ் நாடுகளும், அவற்றின் வா்த்தக கூட்டாளிகளும் உள்ளூா் செலாவணியில் பணப் பரிவா்த்தனைகள் மேற்கொள்வதை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

21-ஆம் நூற்றாண்டில் புதிய வளா்ச்சி வங்கியை பலதரப்பட்ட வளா்ச்சி வங்கியாக புதிய வகையில் வளரச் செய்வதற்கு பிரிக்ஸ் நாடுகள் ஒப்புக்கொண்டன.

சட்டவிரோத பணப் புழக்கம், பண முறைகேடு, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி, போதைப்பொருள் கடத்தல், ஊழல், தொழில்நுட்பங்களை தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றைத் தடுப்பதற்கான தங்கள் பொறுப்பை பிரிக்ஸ் நாடுகளின் தலைவா்கள் மீண்டும் உறுதி செய்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.