காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் ஹமாஸ் பிடித்து வைத்திருக்கிற பிணைக்கதிகளின் விடுவிப்பு ஆகியவற்றுக்கான உடன்படிக்கைக்கு விரைவில் ஹமாஸ் பதிலளிக்கும் என மூத்த ஹமாஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
அக்.7 அன்று தொடங்கிய போர் நான்கு மாதங்களாக நீடித்து வருகிறது. பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஹமாஸ் பிடியில் 100-க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் இன்னமும் பிணைக்கைதிகளாக உள்ளனர்.
ஹமாஸ் தலைவர் ஒசாமா ஹம்தான், அனைத்து கைதிகளையும் விடுவிக்க வேண்டுமானால், போரை நிறுத்துவதும் இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவிப்பதும் தான் ஒரே வழி எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன தலைவர்கள் இருவரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார் ஒசாமா.
மர்வான் பர்கவுடி, பல ஆயுள் தண்டனைகள் பெற்றவர். ஒரு தலைமுறைக்கு முன்பு கடுமையான தாக்குதல்களைத் திட்டமிட்டவர்.
பாலஸ்தீனர்களின் விடுதலைக்கான பாப்புலர் பிரண்ட் அமைப்பின் தலைவர் அஹமத் சதாதையும் விடுவிக்க அவர் கேட்டுள்ளார்.
இஸ்ரேல் சிறைகளில் உள்ள அனைவரையும் விடுவிக்க போதுமான பிணைக்கைதிகள் ஹமாஸிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: கென்யாவில் பெரும் வெடிப்பு: 3 பேர் பலி, பலர் காயம்
மேலும், இஸ்ரேல் போரை நிறுத்துவது மட்டுமின்றி காஸாவின் மறுகட்டுமானத்திலும் பங்காற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.