மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

5 நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 90 வயது மூதாட்டி!

72 மணி நேரத்திற்குப் பிறகு பிழைத்திருக்கிற வாய்ப்பு குறைய தொடங்கிவிடும் என்கிறபோதும் மீட்பு பணிகளில் சில நம்ப முடியாதவை நிகழக்கூடும்.

News image
கடும் மழைக்கு நடுவில் மீப்புப் பணி | AP
Updated On :7 ஜனவரி 2024, 5:53 am

DIN

மேற்கு ஜப்பானைத் தாக்கிய நிலநடுக்கம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து நிலச்சரிவாலும் கட்டிட இடிபாடுகளாலும் 126 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தப் பேரிடர் ஏற்பட்ட 124 மணி நேரத்திற்கு பிறகு 90 வயது மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார்.

ஜப்பானை 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், திங்கள்கிழமை தாக்கியது. இஷிகவா மாகாணம் சுஸு நகரத்தில் வாழ்ந்துவருகிற மூதாட்டி 5 நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளார்.

72 மணி நேரத்திற்குப் பிறகு பிழைத்திருக்கிற வாய்ப்பு குறைய தொடங்கிவிடும் என்கிறபோதும் மீட்பு பணிகளில் சில நம்ப முடியாதவை நிகழக்கூடும்.

நிலநடுக்கத்தின்போது கொதிக்கிற நீர் மேலே பட்டு காயங்களுடன்  மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

வாஜிமா பகுதியில் மீட்புப் பணியில் காவலர்கள் | AP

வாஜிமா பகுதியில் மீட்புப் பணியில் காவலர்கள் | AP

சாலை மட்டத்திற்கு வீட்டின் கூரைகள் தகர்ந்த நிலையில் மழையும் பனிப்பொழிவும் இன்னும் மீட்பு பணிகளைச் சிக்கலாக மாற்றிவருகிறது. விமானங்கள் மற்றும் படகுகள் மூலம் மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகின்றன. 200-க்கும் மேற்பட்டவர்களின் நிலையை அறிய இயலவில்லை. 

முன்னெப்போதும் இல்லாத, வடகொரியாவின் அனுதாபம் ஜப்பானுக்கு இந்த முறை கிடைத்துள்ளது. அமெரிக்கா ஜப்பானுக்கு உதவ முன்வந்துள்ளது.

30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

ஜப்பானிய செய்தித்தாளான யோமியுரி, அந்தப் பகுதியில் 100-க்கும் அதிகமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. முக்கிய இணைப்பு சாலைகள் சேதமடைந்துள்ளன. சில இடங்கள் இன்னும் தனித்தும் உதவிக்காகக் காத்திருப்பதாகவும் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.